NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு
    சீனப் பிரதிநிதிகள் டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Sep 13, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக டெல்லிக்கு வந்திருந்த சீன பிரதிநிதிகளால் டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீனப் பிரதிநிதிகள் டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். இது நகரத்தின் தூதரகப் பகுதியாகும்.

    சீனப் பிரதிநிதிகள் ஹோட்டலுக்கு ஒரு பையைக் கொண்டு வந்திருந்தனர். அந்த பையை சோதனை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டபோது, சீனப் பிரதிநிதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    பாதுகாப்பு நெறிமுறைகளின்படி பையை சோதனை செய்யுமாறு போலீசார் பலமுறை வலியுறுத்தியும் சீன பிரதிநிதிகள் அசைந்து கொடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

    டொமவ்

    அந்த பையில் என்ன இருந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை 

    கடைசி வரை, சீன தூதுக்குழுவினர் அந்த பையை சோதனை செய்ய விடவில்லை என்றும், அதை கடைசியாக சீனத் தூதரகத்திற்கு அவர்கள் எடுத்து சென்றனர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதன் பிறகு வந்த சீன தூதுக்குழுவினர் யாரும் சோதனை செய்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

    ஆனால், சீன பிரதிநிதிகள் தங்கியிருந்த அறை ஒன்றில், "சந்தேகத்திற்குரிய உபகரணங்களை" இருந்ததை ஒரு ஹோட்டல் ஊழியர் கண்டார் என்றும் கூறப்படுகிறது.

    ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9-10ஆம் தேதிகளல் இந்தியாவின் தலைமையின் கீழ் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

    உக்ரைன் போர் உள்ளிட்ட உலக பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்த உலக தலைவர்கள், பல முக்கிய முடிவுகளையும் எடுத்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    சீனா
    உலகம்
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    டெல்லி

    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  ஜி20 மாநாடு
    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  ஹரியானா
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' கர்நாடகா

    சீனா

    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம் கொலை
    சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    'இது போங்காட்டம்' : புடாபெஸ்ட் ஓபன் போட்டியில் சீன வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் டென்னிஸ்
    ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஓப்போ

    உலகம்

    6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது? இந்தியா
    அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம் ஜப்பான்
    புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்  உலக செய்திகள்
    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    ஜி20 மாநாடு

    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்  மத்திய அரசு
    இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்  இந்தியா
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025