NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் 
    விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்

    விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் திமுக கவுன்சிலராக உள்ளவர் பக்கிரிசாமி. இவர் அந்த பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறார்.

    இவர் தனது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

    தற்போது பக்கிரிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் பக்கிரிசாமி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் திமுக'வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவினை வெளியிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

    திமுக

    கடுமையான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும்-மு.க.ஸ்டாலின் 

    மு.க.ஸ்டாலின் கூறியதாவது, எங்கள் அரசை பொறுத்தவரையில், நான் செய்தியை கேள்விப்படவில்லை, தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என நான் சொல்ல மாட்டேன்.

    இந்த செய்தி குறித்து அறிந்தவுடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன்.

    சம்பந்தப்பட்டவரை அவர்களும் உடனடியாக கைது செய்து எனக்கு தகவல்களை அளித்தார்கள்.

    இந்த அரசினை பொறுத்தவரை, குற்றச்செயல்களில் அதுவும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமான சின்னம் என கருதுகிறோம்.

    அதன்படி இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எவ்வித பாராபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என்பதை உறுதியோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    மு.க ஸ்டாலின்
    கடலூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்

    மு.க ஸ்டாலின்

    பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி கோலிவுட்
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மத்திய அரசு
    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு முதல் அமைச்சர்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025