NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்

    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Oct 12, 2023
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி மாநில ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா சாதி மற்றும் பாலியல் ரீதியாக தான் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி கடந்த நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.

    அதன்படி அவர், 'பெண் அமைச்சரின் இந்த விவகாரம் எனக்கு மிகவும் கவலையளித்துள்ளது. அரசியலில் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் நான் வருந்துவேன்' என்று கூறியுள்ளார்.

    பிரச்சனை 

    'பிரியங்கா கூறியது போல் சாதி வேறுபாடு பிரச்சனை ஏதுமில்லை'-தமிழிசை 

    இதனை தொடர்ந்து பேசிய அவர், 'அவருக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருந்திருந்தால், பெண் துணை ஆளுநர் என்னும் முறையில் தம்மிடம் கூறியிருந்தால் நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவருக்கு உதவி செய்திருக்க கூடும் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் அவர் பேசுகையில், 'இதில் என்ன வருத்தமென்றால் பிரியங்கா கூறியது போல அவரது சாதியை வைத்து எவ்வித ஏற்றத்தாழ்வு பிரச்சனை இருந்ததாக நான் பார்த்ததில்லை' என்றும்,

    'முதல் அமைச்சர் ரங்கசாமி, அவரை தனது சொந்த மகள் போல்தான் கவனித்துக்கொண்டார். அதை நான் பலமுறை பார்த்துள்ளேன்' என்றும் கூறியுள்ளார்.

    தொய்வு 

    பிரியங்காவிற்காக முதல்வரிடம் பரிந்து பேசிய தமிழிசை 

    இதற்கிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன்னரே அவரது பணியில் தொய்வு உள்ளது, திருப்தியாக இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் தம்மிடம் கூறியதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

    அதற்கு, 'அமைச்சரவையில் இருப்பதே ஒரேயொரு பெண் அமைச்சர் தான். அதனால் அவரை அழைத்து பேசி, பணியில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துங்கள். ஏனென்றால் அவர் வைத்துள்ள துறைகள் அனைத்தும் மிக முக்கியமான துறைகள்' என்று முதல்வரிடம் தாம் பேசியதாகவும் கூறியுள்ளார் தமிழிசை.

    நீக்கம் 

    பிரியங்கா மீது பதவி நீக்க நடவடிக்கை 

    அதன் பின்னரும் அவரது பணி திருப்தியளிக்காத காரணத்தினால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு முதல்வர், தமிழிசையை கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால், அவர்மீது பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுச்சேரி ஓர் யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரின் இந்த பதவி நீக்க நடவடிக்கை குறித்த கடிதம், மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

    அதனையடுத்து அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

    இது அனைத்தும் ஒரேநாளில் நடந்தது.

    இதனை தெரிந்துகொண்ட சந்திர பிரியங்கா, தானாக ராஜினாமா செய்வது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று தமிழிசை கூறியுள்ளார்.

    நீக்கம் 

    பிரியங்கா பதவி நீக்கம் குறித்து புதுச்சேரி சபாநாயகர் 

    மேலும், கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்த நிலையிலும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்று முதல்வர் பிரியங்காவிற்கு பல வாய்ப்புகளை கொடுத்தார்.

    ஆனால் அவர் அதனை பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தமிழிசை வேதனை தெரிவித்துள்ளார்.

    அதேபோல் இதுவரை புது அமைச்சர் பதவி ஏற்பு குறித்த எவ்வித தகவலும் தமக்கு வரவில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே புதுச்சேரி சபாநாயகர் செல்வம், "3 நாட்களுக்கு முன்னரே பிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். விரைவில் அதற்கான அரசாணை வெளியாகும்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழிசை சௌந்தரராஜன்
    புதுச்சேரி
    முதல் அமைச்சர்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழிசை சௌந்தரராஜன்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன் கோவை
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  புதுச்சேரி
    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை பிரதமர் மோடி

    புதுச்சேரி

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை  தமிழ்நாடு
    9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    முதல் அமைச்சர்

    புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் - புதுச்சேரி முதல்வர் புதுச்சேரி
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தமிழ்நாடு செய்தி

    மத்திய அரசு

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு தேர்தல்
    'ஒரே நாடு ஒரே தேர்தல்'சாத்தியமா? இதற்கு தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ன? தேர்தல்
    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு நாடாளுமன்றம்
    தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025