NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை 
    இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் இயங்க தொடங்கி இருக்கிறது.

    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2023
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவில் உள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், கனமழையாலும் டெல்லியின் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ள வேளையில், நேற்று டெல்லியில் மீண்டும் கனமழை பெய்தது.

    இதனால், வெள்ள நீரை வெளியேற்ற எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐடிஓ மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கும் நிலையில், இன்று காலை டெல்லியின் பல இடங்களில் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உச்ச நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக, குடிமைப் பணியாளர்கள் இரவு முழுவதும் உழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சஜிக்

    இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் இயங்க தொடங்கியது

    கனமழைக்கு மத்தியிலும் யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது ஆறுதலான ஒரு விஷயமாகும்.

    நேற்று 207.68 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீர்மட்டம் தற்போது 206.14 மீட்டராக குறைந்துள்ளது.

    சில நாட்களுக்கு முன் யமுனையின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உயர்ந்தது. இதுவே, டெல்லியில் வெள்ளம் ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகும்.

    45 ஆண்டு கால சாதனையை(207.49 மீட்டர்) முறியடித்து, யமுனை நதியின் நீர்மட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு 208.66 மீட்டராக உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இப்படி அதிகம் வெள்ளம் ஏற்பட்டதால் டெல்லியின் மூன்று முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டது.

    தற்போது, யமுனை நீர்மட்டம் கொஞ்சம் குறைந்திருப்பதால், அதில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் இயங்க தொடங்கி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    வெள்ளம்
    கனமழை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    டெல்லி

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்? சன் பிக்சர்ஸ்
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025