NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி

    கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    ஜூன் மாதத்தில் 88 ஆண்டுகள் இல்லாத அளவு டெல்லியில் ஒரே நாளில் அதிக மழை நேற்று பதிவாகியது.

    மேலும், இன்று தொடர்ந்து டெல்லியில் மழை பெய்து வருகிறது.இதனால் டெல்லி நகரமே ஸ்தம்பித்துள்ளது.

    டெல்லிக்கு பருவமழை வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் ஜூலை 1 வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நேற்று 24 மணி நேரத்தில் 228.1 மிமீ மழை பதிவானதால், நகரின் பல பகுதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கின.

    டெல்லி 

     சுரங்கப்பாதையில் மூழ்கி ஒருவர் பலி 

    மேலும், பல பகுதிகளில் நீடித்த மின்வெட்டு ஏற்பட்டது.

    டெல்லியில் மழை தொடர்பான விபத்துகளில் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் நேற்று மாலை மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    ஷாலிமார் பாக் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

    இன்று, துவாரகா, பாலம், வசந்த் விஹார், வசந்த் குஞ்ச், குர்கான், ஃபரிதாபாத், மனேசர் உள்ளிட்ட டெல்லி-என்சிஆர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    கனமழை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்
    ஆப்பிள் விஷன் ப்ரோவைப் பயன்படுத்தி செய்த டெல்லி மருத்துவர் ஆப்பிள்
    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு ஆம் ஆத்மி
    உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  உள்துறை

    கனமழை

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி  மீட்பு பணி
    தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை  தென்காசி
    நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு  தமிழக அரசு
    ரூ.6,000 நிவாரணத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படவில்லையா?-காரணம் அறிவோம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025