NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2024
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாபிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

    நேற்று, டெல்லி நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்த போதிலும், டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 36.7 டிகிரி செல்சியஸ் மற்றும் 30.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் ஈரப்பதம் 62 சதவீதமாக இருந்தது.

    இன்று, டெல்லியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தியா 

    உத்தரபிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை 

    மேலும், டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    ஐஎம்டியின் தினசரி புல்லட்டின் படி, ஜூலை 5 முதல் 7 வரை கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் ஜூலை 4 முதல் 7 வரை, கிழக்கு ராஜஸ்தானில் ஜூலை 3 முதல் 7 வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தியா 

    அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை 

    மேற்கு ராஜஸ்தானினில் ஜூலை 3 ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 3 மற்றும் 4ஆம் தேதிகளிலும், சத்தீஸ்கரில் ஜூலை 3-ம் தேதி அன்றும் கனமழை பெய்யக்கூடும்.

    ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவிலும், ஜூலை 3 ஆம் தேதி குஜராத்திலும், ஜூலை 5 மற்றும் 7 க்கு இடையில் கடலோர கர்நாடகாவிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 5 மற்றும் 7க்கு இடையில் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    கனமழை
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    டெல்லி

    தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது  கைது
    நாளை திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார் அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்

    இந்தியா

    'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு  மக்களவை
    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு  மத்திய அரசு
    வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்க கையிருப்பு 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்தது யுகே
    முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு  வணிகம்

    கனமழை

    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன? வெள்ளம்
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்  திருச்செந்தூர்
    தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மீட்பு பணி
    வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி விரைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    வானிலை அறிக்கை

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025