NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2024
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

    டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்துள்ள நிலையில், உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

    "ஆவணங்களை வழங்குவதில் அரசு தரப்பில் எந்த தாமதமும் இல்லை என்றும், குற்றச்சாட்டு மீதான வாதம் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தின் தரப்பில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. விசாரணையில் மிகப்பெரிய பதிவு இருப்பது, ED, CBI மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் தவறு அல்ல" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்தியா 

    'ஆதாரங்களை அழிக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை': நீதிமன்றம் 

    மின்னணு ஆதாரங்களை அழிப்பதில் சிசோடியா ஈடுபட்டுள்ளார் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக இருப்பதால் அவர் செல்வாக்கு மிக்கவர் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    எனவே அவரை விடுவித்தால் ஆதாரங்களை அவர் அழிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    மேலும், ஜாமீன் கோருவதற்கு அவரிடம் தகுந்த காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஆனால், விசாரணை நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் ஒவ்வொரு வாரமும் அவரது மனைவியைச் சந்திக்க காவலில் உள்ள அவரை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா  ஆம் ஆத்மி
    டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை  அரவிந்த் கெஜ்ரிவால்
    நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துக்கள் மீது ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை  இந்தியா

    ஆம் ஆத்மி

    மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி காங்கிரஸ்
    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  அரவிந்த் கெஜ்ரிவால்
    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  சண்டிகர்
    அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம்  டெல்லி

    உயர்நீதிமன்றம்

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் செந்தில் பாலாஜி
    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  விநாயகர் சதுர்த்தி
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் ஜெகன் மோகன் ரெட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025