NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார் 

    பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2024
    09:07 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார்.

    என்டிஏ(பாஜக கூட்டணி கட்சிகள்) முதல்வர் ஒருவர், காங்கிரஸ் தலைவரை சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா முதலமைச்சருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருப்பதால், இரு மாநிலங்களும் என்னென்ன திட்டங்களில் ஒத்துழைக்கக்கூடும் என்ற ஊகங்கள் அதிகமாக உள்ளன.

    "முந்தைய ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. மறுசீரமைப்புச் சட்டத்தில் இருந்து எழும் பிரச்சினைகள் குறித்து பல விவாதங்கள் நடந்துள்ளன. இது நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாகத் தீர்க்க வேண்டியது அவசியம்." என்று சந்திரபாபு நாயுடு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

    இந்தியா 

    ஹைதெராபாத்தை பகிர்ந்து கொள்வதற்கான 10 ஆண்டு காலம் முடிவடைகிறது

    "இது குறித்து விவாதிக்க, ஜூலை 6 சனிக்கிழமை அன்று பிற்பகல் உங்கள் இடத்தில் வைத்து நாம் சந்திக்கலாம் என்று நான் முன்மொழிகிறேன்." என்று மேலும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    "நேருக்கு நேரான சந்திப்பு இந்த முக்கியமான பிரச்சினைகளில் விரிவான தீர்வை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் இது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு பரஸ்பர நன்மை பயக்கும். இதன் மூலம் தீர்வுகளை அடைவதற்கு திறம்பட ஒத்துழைக்க முடியும்" என்று அவரது கடிதம் மேலும் கூறியுள்ளது.

    இரண்டு மாநிலத்திற்கும் பொது தலைநகராக உள்ள ஹைதெராபாத்தை பகிர்ந்து கொள்வதற்கான 10 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா இன்னும் மாநிலத் தலைநகரைக் கட்டமைக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆந்திரா
    தெலுங்கானா
    பாஜக

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  ஒப்புதல் அளித்தது மத்திய அரசு  மத்திய அரசு
    நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்  நீட் தேர்வு
    கோனா எலக்ட்ரிக் மாடல் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹூண்டாய்  மின்சார வாகனம்
    பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம்  பீகார்

    ஆந்திரா

    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  விபத்து
    திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் உயர்நீதிமன்றம்
    பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ காவல்துறை

    தெலுங்கானா

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் ராஜஸ்தான்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா
    ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு  ஆந்திரா
    சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தேர்தல்

    பாஜக

    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்
    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி வாரணாசி
    'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கட்டாய வெற்றி...': பிரதமர் மோடி பிரதமர் மோடி
    தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025