NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்
    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க, லாரி மூலம் சுரங்கத்திற்குள் கொண்டு செல்லப்படும் அமெரிக்கன் ஆகர் இயந்திரம்.

    உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்

    எழுதியவர் Srinath r
    Nov 16, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    கடந்த 12ஆம் தேதி, சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றி வந்த 40 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை நம்பிக்கையுடன் வைத்திருக்க மீட்பு குழுவினர் தொடர்ந்து அவர்களுடன் பேசிவருகின்றனர்.

    2nd card

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நார்வே, தாய்லாந்து குழுக்கள்

    கடந்த 2018 ஆம் ஆண்டு, தாய்லாந்து குகையில் சிக்கிய குழந்தைகளை மீட்ட மீட்பு குழுவினர் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த சிறப்பு மீட்பு குழுவினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

    'அமெரிக்கன் ஆகர்' என்ற இயந்திரம் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படுவது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த இயந்திரம் இடிபாடுகளை விரைவாக அகற்றி, சிக்கியுள்ள தொழிலாளர்களை விரைவில் மீட்க உதவும் என நம்பப்படுகிறது.

    இடிபாடுகள் வழியாக 'அமெரிக்கன் ஆகர்' இயந்திரத்தை பயன்படுத்தி, பாதை அமைத்து, அதில் 600-800mm சுற்றளவிலான லேசான எஃகு குழாய்கள் ஒவ்வொன்றாக பொருத்தப்படும்.

    பின்னர், இது வழியாக சிக்கி உள்ள தொழிலாளர்கள், தவழ்ந்து வெளியேற முடியும்.

    3rd card

    மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்ன?

    இமய மலைப் பகுதிகளில் பெரும்பாலும் மென்மையான பாறைகள் அமைந்துள்ளன. சிறு சிறு பாகங்களாகவே கடினமான பாறைகள் அமைந்துள்ளன.

    மென்மையான பாறைகள் எளிதில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்பதால், மீட்பு பணி கடினமானதாகிறது.

    தற்போது கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனிதத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்,

    தேசிய உள்கட்டமைப்பு முயற்சியான 'சார் தாம்' திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    தாய்லாந்து
    நிலச்சரிவு
    இமயமலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    தாய்லாந்து

    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? உலகம்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு
    தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தமிழ் திரைப்படங்கள்

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா

    இமயமலை

    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள் உலகம்
    4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025