NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
    இந்தியா

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 28, 2022, 10:38 am 0 நிமிட வாசிப்பு
    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
    விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே(படம்: The Indian Express Tamil)

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தை சேர்ந்த வேங்கைவயல் என்ற கிராமத்தில் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் மனித கழிவுகள் கலந்திருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதைக் குடித்த குழந்தைகள் சிலர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதை நேரில் சென்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். வேங்கைவயல் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் இதை விசாரிக்க நேரில் சென்றிருந்தனர்.

    உடலாலும் மனதாலும் சிரமப்படும் பட்டியலின மக்கள்!

    இந்த விசாரணையின் போது, அங்கு வசிக்கும் பட்டியலின மக்கள் அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் தேநீர் கடைகளில் தனிக்குவளை வழங்கப்படுகிறது என்பதும் தெரியவந்தது. இதை கேள்விப்பட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை அழைத்துக்கொண்டு அய்யனார் கோவிலுக்குள் சென்றார். கோவிலுக்குள் எல்லோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். இது பிடிக்காத சிங்கம்மாள்(35) என்ற பெண், தனக்கு அருள் வந்ததைப் போல் பாவித்து பட்டியலின மக்களைத் தவறாக பேசினார். இதையடுத்து, சிங்கம்மாளைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பட்டியலின மக்களுக்கு தனி கோப்பைகள் வைத்து தேநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த தேநீர் கடையின் உரிமையாளர் மூக்கையா(57) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    மாநிலங்கள்

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்

    மாநிலங்கள்

    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகா
    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்! தெலுங்கானா
    ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது பிஎஸ்என்எல்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! வாகனம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023