NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
    விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே(படம்: The Indian Express Tamil)

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 28, 2022
    10:38 am

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தை சேர்ந்த வேங்கைவயல் என்ற கிராமத்தில் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் மனித கழிவுகள் கலந்திருப்பதாக ஒரு புகார் எழுந்தது.

    இதைக் குடித்த குழந்தைகள் சிலர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    இதை நேரில் சென்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    வேங்கைவயல் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.

    மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் இதை விசாரிக்க நேரில் சென்றிருந்தனர்.

    குடிநீர் பாதிப்பு

    உடலாலும் மனதாலும் சிரமப்படும் பட்டியலின மக்கள்!

    இந்த விசாரணையின் போது, அங்கு வசிக்கும் பட்டியலின மக்கள் அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் தேநீர் கடைகளில் தனிக்குவளை வழங்கப்படுகிறது என்பதும் தெரியவந்தது.

    இதை கேள்விப்பட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை அழைத்துக்கொண்டு அய்யனார் கோவிலுக்குள் சென்றார்.

    கோவிலுக்குள் எல்லோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

    இது பிடிக்காத சிங்கம்மாள்(35) என்ற பெண், தனக்கு அருள் வந்ததைப் போல் பாவித்து பட்டியலின மக்களைத் தவறாக பேசினார்.

    இதையடுத்து, சிங்கம்மாளைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    மேலும், பட்டியலின மக்களுக்கு தனி கோப்பைகள் வைத்து தேநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த தேநீர் கடையின் உரிமையாளர் மூக்கையா(57) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! கொரோனா
    கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள் தமிழ்நாடு
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா-சீனா மோதல்
    பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும் பயனர் பாதுகாப்பு

    தமிழ்நாடு

    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல் இந்தியா
    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது சாரு நிவேதிதா
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025