NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்
    இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 15, 2023
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இரு தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்திற்குள் மஞ்சள் புகைக் குப்பிகளை வீசிய இருவர்- சாகர் ஷர்மா மற்றும் டி மனோரஞ்சன்- கைது செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்திற்குள் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் அம்பலமானது.

    அவர்களையும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து கலகம் ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்த தூண்டிய மற்றவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்திய நாடாளுமன்றத்தில், அத்தனை பாதுகாப்பு கவசங்களையும் தாண்டி, அவர்கள் எப்படி மஞ்சள் புகைக் குப்பிகளை உள்ளே எடுத்து வந்தனர் என, NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    card 2

    தனிப்பயனாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஷூக்கள்

    கலகக்காரர்கள் அணிந்து வந்த ஷூ தனிப்பயணக்கப்பட்டவை என காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

    அவர்களின் இடது காலில் அணிந்திருந்த ஷூக்களின், (ஸ்னீக்கர்கஸ்) இடது அடிப்பகுதியை வெட்டி, அதனுள், புகை டப்பாவை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர்.

    கூடுதல் பாதுகாப்பிற்காக, இரண்டடுக்கு ரப்பர் ஸ்லிப் கீழே ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனை FIR -இல் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த ஷூக்களை, சாகர் ஷர்மா தனது சொந்த நகரமான லக்னோவில் ஆர்டர் செய்துள்ளார்.

    ஷர்மா, மனோரஞ்சன் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே கேன்களை வீசிய இருவர், நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே இவர்கள் நால்வரின் காலணிகளை தயாரித்த கடையை அடையாளம் காண, லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று டெல்லி போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

    card 3

    கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள்

    ஷர்மா மற்றும் மனோரஞ்சன் பயன்படுத்திய டப்பாக்களையும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.

    அதில் ஆதார் அட்டைகளும் அடங்கும்.

    அதோடு, பாதி கிழிந்த இரண்டு துண்டு பிரசுரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதில் ஒன்றில், 'ஜெய் ஹிந்த்' ஆங்கிலத்தில் வாசகமிட்டு, மூடிய முஷ்டியின் படம் இருந்ததாகவும், இரண்டாவது பிரசுரத்தில் மணிப்பூரில் இன வன்முறை பற்றிய ஆங்கில முழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    ஷர்மாவும், மனோரஞ்சனும் இந்த துண்டுப்பிரசுரங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க விரும்பியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஒரு பிரசுரத்தில் பிரதமரை "காணாமல் போனவர்" என்றும், கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஸ்விஸ் வங்கியின் பண வெகுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நாடாளுமன்றம்

    "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி சோனியா காந்தி
    'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு  திமுக
    நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா  மத்திய அரசு
    சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு ராகுல் காந்தி

    காவல்துறை

    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை டெல்லி
    திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்  திருவண்ணாமலை

    காவல்துறை

    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  போராட்டம்
    பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை காவல்துறை
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை அமெரிக்கா
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025