NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை
    கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை - நெகிழ்ச்சியான நிகழ்வு

    கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை

    எழுதியவர் Nivetha P
    Oct 26, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மணலூர் என்னும் பகுதியில் வசித்தவர் சக்திவேல்(38), இவரது மனைவி முத்துலட்சுமி.

    இவர்களுக்கு 3 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளியான சக்திவேல், கடந்த மார்ச் மாதம் 18ம்.,தேதி வெண்கரும்பூர் என்னும் பகுதியருகே நேர்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து விருதாச்சலம் டிஎஸ்பி ஆ.ஆரோக்யராஜிடம் முத்துலட்சுமி முறையிட்டதாக தெரிகிறது.

    செங்கல் சூளையில் தான் வேலை செய்வதாகவும், 5 குழந்தைகளுடன் யாருடைய ஆதரவும் இன்றி ஓர் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து ஆ.ஆரோக்கியராஜ் தனது வாட்ஸ்அப்'ல் 'உதவும் காவல் இதயங்கள்' என்று ஓர் க்ரூப்பை ஆரம்பித்துள்ளார்.

    அதில் இவர் முத்துலட்சுமியின் பரிதாபமான நிலைமை குறித்தும் பதிவு செய்துள்ளார்.

    காவல் 

    காவல்துறை சார்பில் தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டது 

    அதன்படி அந்த பதிவினை கண்டு சக காவல்துறையினர் மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இதன்மூலம் கிடைத்த உதவித்தொகையான ரூ.10 லட்சம் வைத்து சக்திவேலுக்கு சொந்தமான இடத்தில் 600.,சதுரடி பரப்பளவில் ஓர் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    பலரும் ஒன்றிணைந்து உதவும் நோக்கில் நிதியுதவி செய்து கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு 'கருணை இல்லம்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கான புதுமனை புகுவிழா கடந்த 24ம் தேதி நடைபெற்றது.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இந்த புது வீட்டினை திறந்து வைத்து, முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளிடம் வீட்டின் சாவியை கொடுத்தார்.

    விழாவின் மிகப்பெரிய முக்கியம்சம் என்னவென்றால், காவல்துறை சார்பில் தாய்வீட்டு சீதனம் மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    புதுமனை புகுவிழா 

    #Watch | கடலூர்: கணவனை இழந்து பாழடைந்த குடிசை வீட்டில் 5 குழந்தைகளுடன் தவித்த முத்துலட்சுமி என்ற பெண்ணுக்கு, ₹10 லட்சம் செலவில் கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுத்த விருத்தாச்சலம் காவல்துறை! #SunNews | #Cuddalore | #TNPolice | @tnpoliceoffl pic.twitter.com/hyK8j8uHBZ

    — Sun News (@sunnewstamil) October 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    கடலூர்
    வாட்ஸ்அப்

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    காவல்துறை

    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்  சென்னை
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  டெல்லி
    பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது  டெல்லி
    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு  திருப்பதி
    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா? கடலூர்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    வாட்ஸ்அப்

    குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்! புதுப்பிப்பு
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? இந்தியா
    புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்! தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் புதிய சாட் 'லாக் வசதி'.. அறிமுகப்படுத்தியது மெட்டா! மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025