NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    இந்தியா

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    எழுதியவர் Nivetha P
    Feb 28, 2023, 08:59 pm 1 நிமிட வாசிப்பு
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    மதுரையில் அமைந்துள்ள யாதவா கல்லூரியில் நேற்று(பிப்.,27) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான எஸ்.சுதாகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றுகூறி அவர் பேசியுள்ளார். அப்போது அவர், கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் CSIR-ஆல் நடத்தப்படும் கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதுவதில்லை. இந்த உதவி தொகையானது மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை முடிக்கும் வரை வழங்கப்பட கூடியது என்று அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிபெற பொறியியல் அல்லது தொழில்சார்ந்த துறைகளில் சேர்ந்து படிக்கவேண்டிய அவசியமில்லை. அடிப்படையான அறிவியல் சார்ந்த பட்டபடிப்பினை படித்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

    அடிப்படை அறிவியலில் கணினி தேவைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    தொடர்ந்து பேசிய அவர், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நடத்தப்படும் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும். மாணவர்கள் தொழில்துறை தேவைகள் குறித்தும், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவரையடுத்து மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியல் துறை தலைவர் எஸ்.முருகேசன் வேதியியல் துறையில் தொழில் மற்றும் ஆராய்ச்சி குறித்து பேசினார். அவரை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் ரவியா ஷபானா பர்வீன் அடிப்படை அறிவியலில் கணினி தேவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கல்லூரி மாணவர்கள்
    மாவட்ட செய்திகள்
    மதுரை

    கல்லூரி மாணவர்கள்

    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!  பள்ளி மாணவர்கள்

    மாவட்ட செய்திகள்

    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி தூத்துக்குடி
    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ் மதுரை
    தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின் தமிழ்நாடு
    தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர் தமிழ்நாடு

    மதுரை

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மத்திய அரசு
    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் ரயில்கள்
    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023