NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது

    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது

    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜார்கண்டில் உள்ள ராஞ்சியை சேர்ந்த 17வயதுடைய சிறுமி, ஓர் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் டெல்லி, குர்கானில் உள்ள ஒரு தம்பதியர் வீட்டில் குழந்தையை பார்த்துகொள்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    ஆனால் அந்த தம்பதியர் கடுமையாக வேலை வாங்கியதோடு, தினமும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள்.

    இதுகுறித்து சாகி மையத்தின் பொறுப்பாளரான பிங்கி மாலிக் அளித்த புகாரின்படி, அச்சிறுமியை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளார்கள்.

    அந்த 17வயது சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் வாய் என பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளனர்.

    இதனைதொடர்ந்து கொடுமைப்படுத்திய தம்பதி மனிஷ் கட்டார்(36), கமல்ஜீத் கவுர்(34) ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளார்கள்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், 5மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மாமா தன்னை கட்டாரின் வீட்டில் தன்னை வேலைக்காக விட்டுசென்றதாக கூறியுள்ளார்.

    பணிநீக்கம் செய்யப்பட்டனர்

    பணிப்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய தம்பதி

    மேலும், அந்த வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

    தினமும் தன்னை அடித்து கொடுமைபடுத்தி, இரும்பு கம்பியால் சூடு போடுவதோடு, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார்.

    தொடர்ந்து கட்டார் தன்னை நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து தனது அந்தரங்க பகுதிகளில் அடிமை கொடுமைப்படுத்துவார் என்றும் கூறினார்.

    இத்தம்பதியர் தன்னை அடைத்து கொடுமைப்படுத்தியதோடு தனது குடும்பத்தாருடன் பேசவும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இவர் அளித்துள்ள புகாரின்பேரில் அந்த தம்பதியர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதோடு, போக்ஸோ சட்டமும் பாய்ந்துள்ளது.

    இந்நிலையில் இவர்கள் செய்த குற்றம் வெளியில் தெரியவந்த நிலையில், கமல்ஜீத் பணிபுரியும் மக்கள் தொடர்பு நிறுவனம் மற்றும் கட்டார் பணிபுரிந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இவர்களை பணியில் இருந்து நீக்கியதாக இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு சென்னை
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025