NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 
    இந்தியா

    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 

    எழுதியவர் Sindhuja SM
    May 23, 2023 | 12:18 pm 1 நிமிட வாசிப்பு
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 
    காம்பியாவில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இந்திய இருமல் மருந்தை குடித்ததால் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "ஜூன் 1, 2023 முதல், இருமல் மருந்துகளின் ஏற்றுமதி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, ஏதேனும் அரசு ஆய்வகத்தால் பகுப்பாய்வுச் சான்றிதழ் வழங்கப்பட்டால் மட்டுமே, இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்." என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம்(DGFT) நேற்று ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, காம்பியாவில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இந்திய இருமல் மருந்தை குடித்ததால் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருமல் மருந்துகளின் தரத்தை சோதனை செய்ய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது

    இந்திய மருந்தியல் ஆணையம், பிராந்திய மருந்து சோதனை ஆய்வகம் (RDTL - சண்டிகர்), மத்திய மருந்து ஆய்வுக்கூடம் (CDL - கொல்கத்தா), மத்திய மருந்து சோதனை ஆய்வகம் (CDTL - சென்னை ஹைதராபாத், மும்பை), RDTL (குவஹாத்தி)] மற்றும் NABL(பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) ஆகிய மத்திய அரசின் ஆய்வகங்களிலும், மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற மருந்து பரிசோதனை ஆய்வகங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு மருந்துப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தை சோதனை செய்ய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உஸ்பெகிஸ்தான்
    மத்திய அரசு

    இந்தியா

    2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்? ரிசர்வ் வங்கி
    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா நாடாளுமன்றம்
    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம் ரிசர்வ் வங்கி
    இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்! ரிசர்வ் வங்கி

    உஸ்பெகிஸ்தான்

    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது இந்தியா
    லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம்  உலகம்

    மத்திய அரசு

    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் இந்தியா
    நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்  இந்தியா
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி  பிரதமர் மோடி
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023