NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 
    காம்பியாவில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இந்திய இருமல் மருந்தை குடித்ததால் உயிரிழந்தனர்.

    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 

    எழுதியவர் Sindhuja SM
    May 23, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    "ஜூன் 1, 2023 முதல், இருமல் மருந்துகளின் ஏற்றுமதி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, ஏதேனும் அரசு ஆய்வகத்தால் பகுப்பாய்வுச் சான்றிதழ் வழங்கப்பட்டால் மட்டுமே, இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்." என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம்(DGFT) நேற்று ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு, காம்பியாவில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இந்திய இருமல் மருந்தை குடித்ததால் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    details

    இருமல் மருந்துகளின் தரத்தை சோதனை செய்ய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது

    இந்திய மருந்தியல் ஆணையம், பிராந்திய மருந்து சோதனை ஆய்வகம் (RDTL - சண்டிகர்), மத்திய மருந்து ஆய்வுக்கூடம் (CDL - கொல்கத்தா), மத்திய மருந்து சோதனை ஆய்வகம் (CDTL - சென்னை ஹைதராபாத், மும்பை), RDTL (குவஹாத்தி)] மற்றும் NABL(பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) ஆகிய மத்திய அரசின் ஆய்வகங்களிலும், மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற மருந்து பரிசோதனை ஆய்வகங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட இருக்கிறது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு மருந்துப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தை சோதனை செய்ய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உஸ்பெகிஸ்தான்
    மத்திய அரசு

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    இந்தியா

    இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது !  அமெரிக்கா
    மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்? கேம்ஸ்
    'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி! ரிசர்வ் வங்கி
    டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம் தமிழ்நாடு

    உஸ்பெகிஸ்தான்

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது இந்தியா
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா

    மத்திய அரசு

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்  இந்தியா
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  தமிழ்நாடு
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு  கோவை
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025