NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை 
    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநில விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் போலீசார் உரிய ஆவணமின்றி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வழக்கம் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு வெகு நாட்களாக முன்னெடுத்து வைக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் தங்கள் சொந்த காரணங்களுக்காக ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் டிக்கெட் எடுக்காமல், உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தங்கள் அடையாள அட்டையினை மட்டுமே காண்பிப்பதாக தெரிகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த தெற்கு ரயில்வே, ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போலீசார் மீது தக்க நடவடிக்கையினை எடுக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு முன்னதாக ஓர் கடிதம் எழுதியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    எச்சரிக்கை 

    மாவட்ட எஸ்.பி.க்கள், மற்றும் கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை

    அந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் ஓர் சுற்றறிக்கையினை மாவட்ட எஸ்.பி.க்கள், மற்றும் கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ளார்.

    அதில் அவர், தெற்கு ரயில்வே, நுண்ணறிவு மற்றும் உளவுப்பிரிவு காவல்துறை மூலம் ரயில்களில் போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக கூறப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்தி, தகவலை தலைமை அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டும்.

    அதன் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இது குறித்து தெற்கு ரயில்வே எழுதிய புகார் கடிதத்தில், விதிமுறைகள் படி ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    ரயில்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    காவல்துறை

    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை

    ரயில்கள்

    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை தெற்கு ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் மதுரை
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! தெற்கு ரயில்வே

    தமிழ்நாடு

    வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார்  மு.க ஸ்டாலின்
    சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை பள்ளி மாணவர்கள்
    ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு தமிழக அரசு
    கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025