
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
சென்ற வாரம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்த நிலையில், இன்று ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார்.
கடந்த 2 மாதங்களாக வன்முறையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மணிப்பூர் நகரம். அதற்கு காரணம், மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த இரு சமூகத்தினருக்கும் இருந்த கருத்து மோதல், கடந்த 2 மாதங்களாக கலவரமாக மாறியுள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து மத்திய அரசோ, பிரதமரோ தலையிடவில்லை என்ற பேச்சும் நிலவி வரும் இந்த நேரத்தில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்கு பிரயாணப்படுகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
ராகுல் மணிப்பூர் பயணம்
#NewsUpdate | இரண்டு மாதமாக வன்முறை நீடிக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி!#SunNews | @RahulGandhi | #Manipur pic.twitter.com/6fH6q1iW6j
— Sun News (@sunnewstamil) June 29, 2023