NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை
    மாதவர பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர் பாபு

    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    அதன் படி, இனி வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆந்திரா, திருப்பதி, காளஹஸ்தி போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக தனி பேருந்து நிலையம் கடந்த 2018ம் ஆண்டு மாதவரத்தில் ரூபாய் 94.16 கோடியில் கட்டப்பட்டது.

    இதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அரசின் ஆய்வு

    தங்கும் அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற பல வசதிகள் செய்ய முடிவு

    இதனையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைவருமான பி.கே.சேகர்பாபு மாதவர பேருந்து நிலையத்தை நேற்று(ஜன.,22) ஆய்வு மேற்கொண்டார்.

    இனி வடக்கு வடக்குநோக்கி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

    அந்த அனைத்து பேருந்துகளும் மாதவர பேருந்துநிலையத்திற்கு திருப்பிவிடப்படும்.

    இதுதவிர, அங்கு ஆந்திர மாநிலபோக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தங்கும் அறை அளிக்கப்பட்டுள்ளது.

    எனினும், அது வசதியாக இல்லை என்பதால், கூடுதல் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆண், பெண் பயணிகள் தங்கும் கூடங்களை 2, 4, 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, பேருந்து நிலைய முகப்பில் பயணிகள் பயன்பாட்டிற்காக எல்.இ.டி. அறிவிப்பு பலகை போன்ற பல வசதிகள் செய்யப்படவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம் சென்னை
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் கோவை
    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு ஸ்டாலின்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025