NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை
    இந்தியா

    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை

    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை
    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023, 01:44 pm 0 நிமிட வாசிப்பு
    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை
    மாதவர பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர் பாபு

    சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன் படி, இனி வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆந்திரா, திருப்பதி, காளஹஸ்தி போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக தனி பேருந்து நிலையம் கடந்த 2018ம் ஆண்டு மாதவரத்தில் ரூபாய் 94.16 கோடியில் கட்டப்பட்டது. இதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தங்கும் அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற பல வசதிகள் செய்ய முடிவு

    இதனையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைவருமான பி.கே.சேகர்பாபு மாதவர பேருந்து நிலையத்தை நேற்று(ஜன.,22) ஆய்வு மேற்கொண்டார். இனி வடக்கு வடக்குநோக்கி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த அனைத்து பேருந்துகளும் மாதவர பேருந்துநிலையத்திற்கு திருப்பிவிடப்படும். இதுதவிர, அங்கு ஆந்திர மாநிலபோக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தங்கும் அறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அது வசதியாக இல்லை என்பதால், கூடுதல் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் பயணிகள் தங்கும் கூடங்களை 2, 4, 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, பேருந்து நிலைய முகப்பில் பயணிகள் பயன்பாட்டிற்காக எல்.இ.டி. அறிவிப்பு பலகை போன்ற பல வசதிகள் செய்யப்படவுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் மாவட்ட செய்திகள்
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? இந்தியா
    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? வைரல் செய்தி
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    சென்னை

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் 2023
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் தமிழ்நாடு
    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் பட்ஜெட் 2023
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023