NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
    அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் பிரிண்டரை பறிமுதல் செய்த போலீசார்

    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது

    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்தை சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர் மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இயந்திரம் கள்ள நோட்டுகளை எடுத்துக்கொள்ளவில்லை.

    அதனை தொடர்ந்து, கனிகராஜ் கள்ள நோட்டுகள் செலுத்த முயன்றதை அந்த இயந்திரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    வங்கிக் கணக்கு எண்ணை வைத்து கனிகராஜை கண்டறிந்த கேரள போலீசார், அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 76 ஐநூறு ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    356 ஐநூறு ரூபாய் நோட்டுகள்

    1,78,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் ராம்குமார், அழகர் மற்றும் திருமயத்தை சேர்ந்த பழனிக்குமார், குமாரலிங்கத்தை சேர்ந்த ஹக்கீம் ஆகியோரை போலீசார் கைது செய்தது.

    கைதான ஹக்கீம் அளித்த தகவலின்படி, இதில் சம்பந்தப்பட்ட தேனி மாவட்டம் பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பிரபு வீட்டில் இருந்த ஓர் பிரிண்டர், 1,78,000 மதிப்புள்ள 356 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    பிரபுவிடம் விசாரணை நடத்தியதில், அவன் தான் ஓர் வனத்துறை அதிகாரி என்று கூறி வீடு எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்தது தெரியவந்துள்ளது.

    இதனைதொடர்ந்து பிரபுவிற்கு வாடைக்கு வீடு கொடுத்த கொழுமம் ஊராட்சி மன்ற செயலர் சங்கிலித்துரை என்பவரிடமும் கேரள போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பூர்
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025