NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு
    'டீச்சர்' என்று அழைப்பதனால் குழந்தைகளிடையே சமத்துவம் வளரும்: KSCPCR

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 13, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    மாணவர்கள் பாலின வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் ஆசிரியர்கள் அனைவரையும் 'டீச்சர்' என்று அழைக்க வேண்டும் என கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(KSCPCR), கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    பொதுவாக, பெண் ஆசிரியர்களை 'மேடம்' என்றும் ஆண் ஆசிரியர்களை 'சார்' என்றும் அழைப்பது இந்தியாவில் வழக்கம். இனி, மாணவர்கள் ஆசிரியர்களை அப்படி அழைக்கக்கூடாது, 'டீச்சர்' என்று தான் அழைக்க வேண்டும் என இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    'மேடம்' 'சார்' என்ற வார்த்தைகளில் பாலின வேறுபாடுகள் இருப்பதால் 'டீச்சர்' என்ற வார்த்தைப் பரிந்துரைக்கப்ட்டுள்ளது.

    இந்த ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ் குமார், உறுப்பினர் சி.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 'டீச்சர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த அறிவுறுத்துமாறு பள்ளிகல்வித்துறைக்கு புதன்கிழமை(ஜன:11) உத்தரவிட்டது.

    கேரளா

    சமத்துவத்திற்கான முதற்படி

    'சார்' அல்லது 'மேடம்' என்று அழைப்பதற்குப் பதிலாக 'டீச்சர்' என்று அழைப்பதனால் குழந்தைகளிடையே சமத்துவம் வளரும், அதோடு ஆசிரியர்களுடனான அவர்களின் பற்றுதலும் அதிகரிக்கும் என்று குழந்தை உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடபட்டுள்ளது.

    ஆசிரியர்களிடையே காட்டபடும் பாலின வேறுபாடுகளை தகர்த்தெறிய கோரி ஒருவர் மனு அளித்திருந்தாகவும் அந்த மனுவை பரிசீலித்ததன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    உலகின் 3வது பெரிய வாகன சந்தை: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா வாகனம்
    உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு! இந்தியா
    இந்தியாவில் 10 லட்சம் கார்களை தயாரித்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனம் கார்
    தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025