NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
    இந்தியா

    பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!

    பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2023, 02:04 pm 1 நிமிட வாசிப்பு
    பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
    கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் பலி!

    கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பீதியை கிளப்பி இருக்கிறது. கெட்டுப்போன உணவை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்பவர் டிசம்பர் 31 ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் உணவை ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து ஒவ்வாமைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக, சில நாட்களுக்கு முன், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் வேலை செய்யும் செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் உணவு உண்டதால் உயிரிழந்தார். தரமற்ற உணவால் ஒரே வாரத்தில் இருவர் உயிரிழந்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

    "அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் சனிக்கிழமை (ஜனவரி 7) அதிகாலை உயிரிழந்துவிட்டார்" என்று காவல்துறை கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவரின் தடயவியல் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உணவகத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை விரிவாக விசாரிக்கும் படி மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருக்கிறார். பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ் கூறியதாவது: "இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்தும், அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் டிஎம்ஓ விசாரித்து வருகிறார்."

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்! ட்விட்டர்
    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி கால்பந்து
    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள் சரும பராமரிப்பு

    இந்தியா

    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது பிலிப்பைன்ஸ்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023