NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
    கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் பலி!

    பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2023
    02:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பீதியை கிளப்பி இருக்கிறது.

    கெட்டுப்போன உணவை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்பவர் டிசம்பர் 31 ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் உணவை ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.

    அன்றிலிருந்து ஒவ்வாமைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    முன்னதாக, சில நாட்களுக்கு முன், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் வேலை செய்யும் செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் உணவு உண்டதால் உயிரிழந்தார்.

    தரமற்ற உணவால் ஒரே வாரத்தில் இருவர் உயிரிழந்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    நடவடிக்கை

    எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

    "அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் சனிக்கிழமை (ஜனவரி 7) அதிகாலை உயிரிழந்துவிட்டார்" என்று காவல்துறை கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், உயிரிழந்தவரின் தடயவியல் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உணவகத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதை விரிவாக விசாரிக்கும் படி மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருக்கிறார்.

    பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ் கூறியதாவது:

    "இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்தும், அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் டிஎம்ஓ விசாரித்து வருகிறார்."

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    இந்தியா

    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் காவல்துறை
    டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி தமிழ்நாடு
    26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை இந்தியா
    செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்திய மணமக்களின் படங்கள் - பொதுமக்களின் கருத்து? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025