NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!
    'இமயமலை-தங்கம்' என்று அழைக்கப்படும் கார்டிசெப்ஸ்' பூஞ்சை(படம்: opindia.com)

    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2022
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    சீனர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் இந்திய-சீன எல்லையில் தொடர் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சுமார் 400சீன வீரர்கள் அருணாச்சல் மாநிலத்தின் தவாங் பகுதிக்குள் நுழைந்தனர். இவர்களை 50க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர்.

    இந்நிலையில், இவர்கள் அடிக்கடி இந்தியாவிற்குள் நுழைவது 'கார்டிசெப்ஸ்' என்ற அறிய வகை கம்பளி பூச்சி பூஞ்சையை திருடுவதற்கு தான் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்த பூஞ்சை மிக மிக அரிது என்பதால் இதற்கு 'இமயமலை-தங்கம்' என்ற பெயரும் உள்ளது.

    இந்த பூஞ்சைக்கு புற்றுநோயைக் கூட குணமாக்கும் திறன் இருப்பதால் இது சீனாவில் தங்கத்தை விட மதிப்புமிக்கது.

    இதற்காகத் தான் சீனர்கள் அடிக்கடி இந்தியாவிற்குள் நுழைவதாக இந்திய வீரர்கள் கூறியுள்ளனர்.

    இமயமலை

    தங்கத்தை விட மதிப்புமிக்க பூஞ்சைகள்!

    இந்த பூஞ்சை சர்வரோக நிவாரணியாக கருதப்படுவதால் இது சீனாவில் தங்கத்தை விட அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

    இதை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கமும் சீனர்களுக்கு இருக்கிறது.

    உலகளவில் இதற்கான சந்தை விலை 1,072.50 மில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    மேலும், இதை மிக பெரிய அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது சீன நாடு தான் என்கிறது உலக புள்ளிவிவரங்கள்.

    சீனாவில் கார்டிசெப்ஸின் அறுவடை முன்பைவிட குறைந்துள்ளது, ஆனால் அதன் தேவை மிகவும் அதிகரித்துவிட்டது.

    இதன் காரணமாகவே சீன வீரர்கள் இதை திருடுவதற்காக இந்திய எல்லைக்குள் நுழைவதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த வகை பூஞ்சை தவாங் பகுதிகளில் அதிகம் விளைவதால் இவைகளையே சீனர்கள் குறிவைப்பதாக இந்திய வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இந்தியா-சீனா மோதல்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! வைரஸ்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா

    இந்தியா

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! நீட் தேர்வு
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்திய ரயில்வே
    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! வைரல் செய்தி
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் வாகனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025