NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ

    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2024
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் தலையீடு இருந்தபோதிலும், தேர்தல்கள் "சுதந்திரமாகவும் நியாயமாகவும்" நடந்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

    கடந்த இரண்டு கனேடியத் தேர்தல்களில் சீனா தலையிட முயன்றது, ஆனால் சீனாவால் முடிவுகளை மாற்ற முடியவில்லை.

    மேலும், சீனா ஒரு அரசியல் கட்சியை விட மற்றொரு அரசியல் கட்சியை விரும்புவது "சாத்தியமற்றது" என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    2019 மற்றும் 2021 கனேடிய தேர்தல்களில் சீனா தலையிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கும் அறிக்கைகளை விசாரிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.

    கனடா 

    இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள் 

    2021 பிரச்சாரத்தின் போது கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவரான எரின் ஓ'டூல், சீன தலையீட்டினால் தனது கட்சி ஒன்பது இடங்களை இழந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

    இருப்பினும், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.

    அந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, "வெளிநாட்டு அரசுகள் தலையிட முயற்சித்தாலும், அந்தத் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட்டன. அவை கனடியர்களால் தீர்மானிக்கப்பட்டன" என்று எரின் ஓ'டூல் கூறி இருந்தார்.

    கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாகவும் சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.

    இது குறித்து ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டது. அந்த பொது விசாரணையில் சாட்சியமளித்த கனேடிய அதிகாரிகள், கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டது தொடர்பான குற்றசாட்டுகள் அனைத்தும் மறுத்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கனடா

    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு
    2 மாதங்களுக்கு பிறகு கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா  இந்தியா
    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா அமெரிக்கா

    சீனா

    மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்  அறிவியல்
    இந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்? இந்தியா
    பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா பூட்டான்
    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்

    உலகம்

    அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி அமெரிக்கா
    பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு  பிரிட்டன்
    லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்  இஸ்ரேல்
    மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா மாலத்தீவு

    உலக செய்திகள்

    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  இந்தியா
    பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்  பாகிஸ்தான்
    எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்  எலான் மஸ்க்
    'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி  மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025