NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்
    திருச்சிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, மக்கள் தேவைகளை அறிவது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம்.

    இடையில் அவரது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, பயணங்களை தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சுற்றுப்பயணமாக தனி விமானம் மூலம் இன்று திருச்சிக்கு செல்கிறார்.

    அதன்படி, ரெஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு நலத்திட்டங்களை வழங்குவதோடு, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருது வழங்கி பேசவுள்ளார்,

    இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

    மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தயார் நிலையில் உள்ள திட்டப்பணிகளை துவக்கி வைத்தல் முதலியவற்றை முதல்வர் மேற்கொள்ள உள்ளார்.

    நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை செய்த அமைச்சர் கே.என்.நேரு

    பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கிய தமிழக முதல்வர்

    இதனையடுத்து, மணப்பாறையில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த வன்மரக்கூழ் ஆலையை ஸ்டாலின் திறக்கவுள்ளார்.

    இதனையடுத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலக கட்டடத்தையும் திறந்து வைக்கிறார்,

    பின்னர் சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒரு ஒரு கோடியாவது பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கி சிறப்பிக்கிறார்.

    இவ்வாறாக மேலும் சில நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஸ்டாலின் அவர்கள், மீண்டும் தனி விமான மூலம் சென்னை திரும்புகிறார்.

    முதல்வர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளையும் அமைச்சர் கே.என்.நேரு பிரம்மாண்டமாக செய்து, அது குறித்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதல் அமைச்சர்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா

    தமிழ்நாடு

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு! இந்தியா
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! இந்தியா
    கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள் இந்தியா
    தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025