NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 
    பாலின ஈர்ப்பு என்பது தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குணாதிசயம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    நகரங்களில் அதிகமானோர் கிளாஸட்டில்(closet) இருந்து வெளியே வருகிறார்கள் என்பதற்காக ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்கள்" என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 19) தெரிவித்தது.

    ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்களின் வாதங்களை கேட்டபோது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இதை கூறினார்.

    ஒரே பாலின திருமணங்களுக்கு உரிமை கோரும் மனுக்கள், தேசத்தின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்களை" பிரதிபலிக்கின்றன என்றும் மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

    details

    பாலின ஈர்ப்பு என்பது தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குணாதிசயம்: தலைமை நீதிபதி 

    "தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குணாதிசயத்தின் அடிப்படையில் ஒரு தனிநபருக்கு எதிராக அரசு பாகுபாடு காட்ட முடியாது. நீங்கள் அதை உள்ளார்ந்த குணாதிசயமாக பார்த்தால், ​​​​அது "நகர்ப்புற உயரடுக்கின் கருத்து" என்ற வாதத்திற்கு புறம்பானது. ஒரே பாலின திருமணம் என்பது நகர்ப்புற உயரடுக்கின் கருத்து என்பதைக் காட்டுவதற்கு அரசாங்கத்திடம் எந்த தரவுகளும் இல்லை." என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    இந்த விவகாரத்தை பற்றி உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    "அவர்களுக்கு உரிமைகளை வழங்குவது, அவர்களது உறவை அங்கீகரிப்பது, அத்தகைய உறவுக்கு சட்டப்பூர்வ புனிதத்தை வழங்குவது ஆகியவற்றை சட்டமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும், நீதித்துறையால் அல்ல" என்றும் மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்
    மத்திய அரசு

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    இந்தியா

    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  லண்டன்
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை  வானிலை அறிக்கை
    உயிரி எரிபொருள் கலந்த பெட்ரோல் பயன்பாடு.. யாருக்கு லாபம்?  ஆட்டோமொபைல்

    உச்ச நீதிமன்றம்

    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் இந்தியா
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம் இந்தியா
    பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் இந்தியா

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    மத்திய அரசு

    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல் ஆதார் புதுப்பிப்பு
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை உச்ச நீதிமன்றம்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025