NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்
    இந்தியா

    தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்

    தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023, 05:18 pm 1 நிமிட வாசிப்பு
    தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்
    முதன்முறையாக குடும்ப உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த சந்திரசூட்

    டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களை இதுவரை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வராத சந்திரசூட் இன்று அழைத்து வந்தது நீதிமன்றத்தில் இருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சந்திரசூட் மனைவி ராஷ்மி சந்திரசூட் 2007ம் ஆண்டு மறைந்தார், இதனையடுத்து அவர் கல்பனா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மகி மற்றும் பிரியங்காவை இவர்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் தனது மகள்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த சந்திரசூட் அறை 1'க்கு அழைத்து சென்றார்.

    உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டதால் இரு மகள்களையும் அழைத்து வந்த தலைமை நீதிபதி

    நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கிய அவர், நீதிபதிகள் இருக்கும் சேம்பர்கள், வழக்கறிஞர்கள் வாதம் முன்வைக்கும் இடம் முதலியவற்றை சுற்றிக்காட்டி தெளிவாக எடுத்துரைத்தார். உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று மகள்கள் ஆசைப்பட்டதால் சந்திரசூட் அவர்களை அழைத்து வந்துள்ளார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகிறது. உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட், சபரிமலை வழக்கு, ராமர் கோயில் வழக்கு போன்ற முக்கிய வழக்குகளின் தீர்ப்பினை அளித்த அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்றிருந்தார். இவரது தந்தையும் தலைமை நீதிபதியாக இருந்தவர் தான். இதனை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக சந்திரசூட் அவர்கள் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? ஓடிடி
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை டி20 கிரிக்கெட்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா

    இந்தியா

    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி தமிழ்நாடு
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023