NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்
    இந்தியா

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023, 06:43 pm 0 நிமிட வாசிப்பு
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்
    திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வது வரலாற்றில் இதுவே முதல்முறை.

    ஜக்தல்பூரில் உள்ள லால் பாக் மைதானத்தில் நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சத்தீஸ்கர் காவல்துறையின் திருநங்கை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேலும் பங்கேற்கிறார். திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போலீஸ் அதிகாரிகள் சத்தீஸ்கர் காவல்துறையின் பஸ்தார் படையை சேர்ந்தவர்கள் ஆவர். பஸ்தார் போராளிகள் படை என்பது சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் பிரிவாகும். இது பஸ்தரின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் பால்புதுமையினர் பங்கேற்பது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை எடுத்து செல்லும் என்று பஸ்தாரின் இன்ஸ்பெக்டர் ஜெனரல்(ஐஜிபி) பி சுந்தர்ராஜ் குறிப்பிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

    சத்தீஸ்கர் காவல் துறையில் நியமிக்கப்பட்ட 9 திருநங்கைகளில் 2 பேர் விழாவில் பங்கேற்பு

    அணிவகுப்பில் முக்கிய விருந்தினராக முதலமைச்சர் கலந்து கொள்வார் என்று கூறிய அவர், "மாற்று பாலினத்தவருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். நிச்சயமாக இது காவல்துறையை சமத்துவம் உள்ளதாகவும் முற்போக்கானதாகவும் மாற்றும்." என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதில் கலந்துகொள்ள இருக்கும் ரியா மாண்டவி, தாங்கள் அணிவகுப்பில் பங்கேற்பது மொத்த சமூகத்திற்கும் ஒரு பெருமையான தருணம் என்று தெரிவித்தார். "இந்த வாய்ப்பிற்காக அரசு மற்றும் காவல் துறைக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் காவல் துறை, ஆகஸ்ட் 2022 இல், பஸ்தார் போராளிகள் படையின் ஒரு பகுதியாக 9 திருநங்கைகளை அதிகாரிகளாக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை
    குடியரசு தினம்
    காவல்துறை

    சமீபத்திய

    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி

    இந்தியா

    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா உலக வங்கி
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு

    காவல்துறை

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை

    குடியரசு தினம்

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் டெல்லி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் நரேந்திர மோடி
    74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது

    காவல்துறை

    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023