Page Loader
சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்! 
சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்

சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்! 

எழுதியவர் Arul Jothe
Jun 06, 2023
10:52 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் பயணியர் கப்பல் சேவையை தொடங்கவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. திட்டத்தின் கீழ் பயணிகள் கப்பல்கள் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, எம்.வி. எம்பிரஸ் என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பலை நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல், சென்னை - இலங்கை இடையேயான பயணியர் கப்பல் சேவையை வழங்குகிறது. இலங்கையில் உள்ள 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இந்த பயணியர் கப்பல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Passenger Ferry

சுற்றுலா கப்பல் 

அதுபட்டுமின்றி, 2 முதல் 5 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற வர்த்தக மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று மந்திரி சர்பானந்தா சோனோவால் உரையாற்றினார். "துறைமுகங்களில் சரக்குகளை கையாள்வதற்கான செலவை குறைக்க வேண்டும் என்றும் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு வர்த்தக அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன" என்றும் பேசினார். இந்த நிகழ்ச்சியில், 2022-23 வரை சென்னை துறைமுகசபை பள்ளியில் படித்த மாணவர்களுக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்வில், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் மற்றும் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.