NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 17, 2023
    02:29 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

    இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமசந்திரன் இடம்பெறக்கூடாது என்றும்,

    கல்லூரி மாணவிகளின் பிரதிநிதி, பெற்றோரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுமாறு குழுவினை மாற்றியமைக்கவேண்டும் என்று பெயர் வெளியிடவிரும்பாத ஏழு மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.

    தங்கள் அடையாளங்களை வெளியிடாமல் விசாரணை நடத்தவேண்டும் என்றும், தங்கள் விவரங்களைமூடி முத்திரையிடப்பட்ட உறையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    தொடர்ந்து மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தவறிவிட்டதாகவும், பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

    கலாஷேத்ரா 

    வழக்கின் விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    மேலும் அந்த மனுவில், பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சிகளாகவுள்ள மாணவிகள்மீது கலாஷேத்ரா நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச்சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் கலாஷேத்ராவில் கொள்கைகள் வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த மனுவானது விசாரணைக்கு வந்தநிலையில், மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு உத்தரவுப்பிறப்பித்தார் நீதிபதி.

    தொடர்ந்து, நிர்வாகத்தின் பெயரை காப்பாற்றிக்கொள்ள விசாரணைக்குழுவினை ஏன் சென்னை உயர் நீதிமன்றம் அமைக்கக்கூடாது என கலாஷேத்ரா நிர்வாகம் விளக்கமளிக்கவேண்டும் என்றும்,

    மகளிர் மாநிலஅறிக்கையினை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், மனுவுக்கு பதிலளிக்க கலாஷேத்ரா மற்றும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கினை 24ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்

    சென்னை

    சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு தமிழ்நாடு
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு கோவில்கள்
    புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு சின்மயி

    சென்னை உயர் நீதிமன்றம்

    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் போக்குவரத்து விதிகள்
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை
    18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு தமிழ்நாடு
    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா

    தமிழக அரசு

    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் ஆதார் புதுப்பிப்பு
    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் காற்று மாசுபாடு
    தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம் தமிழ்நாடு
    தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு இந்தியா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் கவர்னர்
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்: வானிலை அறிக்கை  வானிலை அறிக்கை
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி கேரளா
    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு சட்டமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025