NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம் 
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம்

    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 11, 2023
    08:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    அதனை தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.

    இதனையடுத்து மாணவிகள் குறிப்பிட்ட 4 பேர் மீது எழுத்துபூர்வமாக புகார் அளித்த நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மற்ற 3 பேர் தற்காலிக ஆசிரியர்கள் என்பதால் பணி நீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பாலியல் விவகாரம் 

    நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜாமீன் மனு 

    இந்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் மூடப்பட்டிருந்த கல்லூரி திறக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே இன்று(ஏப்ரல்.,11) மாநில மனித உரிமைகள் ஆணையம் மாணவ-மாணவியரிடம் விசாரணை நடத்தினர்.

    ஆனால் தற்போது தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வுகள் முடிந்த பின்னர் அடுத்தவாரம் விசாரணையினை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் சார்பில் ஜாமீன் மனுவானது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    மனித உரிமைகள் ஆணையம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம் ரயில்கள்
    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தேர்தல் ஆணையம்
    திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம் கொரோனா
    சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு சென்னை

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025