NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நேரு(47).

    இவர் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனமான ஹிஜாவு நிறுவனத்தில் முகவராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிறுவனம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 15ஆயிரம் வரை வட்டி கிடைக்கும் என்றுகூறி நிறுவனத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்துள்ளனர்.

    இதனை நம்பி பலர் இதில் முதலீடு செய்துள்ளார்கள்.

    நேருவும் இதில் பலரை பேசி முதலீடு செய்ய வைத்துள்ளார்.

    ஆனால் அந்த நிறுவனம் மக்களுக்கு கூறியவாறு வட்டி பணத்தையும் கொடுக்கவில்லை, முதலீடு தொகையையும் அளிக்கவில்லை.

    இதனால் பணத்தை இழந்த சுமார் 10,000 பேர் ரூ.800கோடி வரை தங்களிடம் பணமோசடி செய்ததாக இந்த நிறுவனம் மீது தமிழக காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்கள்.

    தூக்கிட்டு தற்கொலை

    பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரை அடுத்தடுத்து கைது செய்த காவல்துறை

    இதனையடுத்து போலீசார் இதில் சம்பந்தப்பட்ட முகவர் நேரு உள்பட 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

    இந்நிலையில் நவம்பர் மாதம் கைதான நேரு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    ஆனால் அவர் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மனவுளைச்சலில் இருந்த நேரு நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றம் சென்று வந்துள்ளார்.

    பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்த நிலையில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நேருவின் உடலை கைப்பற்றினர்.

    ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    சென்னை

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் இந்தியா
    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை இந்தியா
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சமூக வலைத்தளம்

    தமிழ்நாடு

    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் கர்நாடகா
    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம் தஞ்சை பெரிய கோவில்
    வைரல் வீடியோ: ஓடும் ரயிலில் வட இந்தியர்களை தாக்கும் தமிழர் இந்தியா
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025