NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
    இந்தியா

    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி

    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 07:03 pm 0 நிமிட வாசிப்பு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
    கள்ளக்குறிச்சி பள்ளி வகுப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

    கள்ளக்குறிச்சி, கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்து சென்ற சின்னசேலம் போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜூலை 17ம்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. தொடர்ந்து 5 நாட்கள் நடந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்குவது குறித்து 6 வாரம் கழித்து முடிவு செய்யப்படும்

    இதன் பிறகு, மாணவியின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பள்ளி நிர்வாகமும் தனது வாதங்களை முன்வைத்தது. இதனையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்கலாம் என்றும், எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பள்ளியில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 9 முதல் 12 வகுப்புவரை சுமூகமான முறையில் வகுப்புகள் நடந்து வருகிறது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    சென்னை உயர் நீதிமன்றம்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023