NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி
    கள்ளக்குறிச்சி பள்ளி வகுப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சி, கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்து சென்ற சின்னசேலம் போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரது மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜூலை 17ம்தேதி போராட்டம் கலவரமாக மாறியது.

    தொடர்ந்து 5 நாட்கள் நடந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டது.

    144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    ஊதிய அடிப்படையில் காவலர்கள்

    எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்குவது குறித்து 6 வாரம் கழித்து முடிவு செய்யப்படும்

    இதன் பிறகு, மாணவியின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பள்ளி நிர்வாகமும் தனது வாதங்களை முன்வைத்தது.

    இதனையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், தற்போது 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்கலாம் என்றும்,

    எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, பள்ளியில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே 9 முதல் 12 வகுப்புவரை சுமூகமான முறையில் வகுப்புகள் நடந்து வருகிறது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025