NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை-வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் இயங்கிவரும் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதியிலுள்ள வனவிலங்குகளுக்கு இடையூறாகவும், அங்கு வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும் ஈஷா யோகாமையத்தின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறி கடந்த 2017ம்ஆண்டு பழங்குடியின பாதுகாப்பு சங்கத்தலைவர் முத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதனிடையே தமிழ்நாடு நகரமைப்பு திட்டமிடல் துறையினர், ஆதியோக சிலை மற்றும் கட்டிடங்கள் கொண்ட ஈஷா மையம் 109 ஏக்கர் பரப்பளவில் விதிகளை மீறி கட்டப்படுவதால் 2012ல் அதன் பணிகளை நிறுத்துமாறும், மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஷா நிறுவனம் மேல்முறையீடு செய்தது என்று தெரிவித்துள்ளனர்.

    விசாரணை 

    ஆவணங்களை கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வு செய்ய உத்தரவு 

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று(ஆகஸ்ட்.,24)நீதிபதிகள் ஆதிகேசவலு-கங்காபுர்வாலா ஆகியோர் அமர்வின் முன்னிலையில் வந்தது.

    அப்போது குறிப்பிட்ட இடத்தில் கட்டிடம் கட்ட திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி உள்ளிட்டவை வழங்கப்பட்டதன் ஆவணங்கள் எதுவும் தங்களிடமோ, இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு நகரமைப்புத்திட்டமிடல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல் மலை இடர் பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ், சுற்றுசூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியச்சான்றிதழ், வழிபாட்டு தலத்துக்கான தடையில்லா சான்றிதழ்கள் உள்ளிட்டவையும் ஈஷா நிறுவனத்திடம் இல்லை என்று கூறப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருதரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இயக்குனர் ஆய்வுச்செய்து, அதில் உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    ஈஷா யோகா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    கோவை

    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள் தமிழ்நாடு
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்
    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா

    ஈஷா யோகா

    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண் கோவை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025