NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 

    எழுதியவர் Nivetha P
    Apr 20, 2023
    01:14 pm
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்

    சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. உடனே அங்கிருந்த மக்கள் இது குறித்து பாரிமுனை, பூக்கடை பகுதி தீயணைப்பு நிலையத்திற்கும், அப்பகுதி காவல்துறைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்கள். அந்த தகவலின் படி. சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள், அரக்கோணம் மற்றும் சென்னை அடையாறு பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் அதிநவீன உபகரணங்களோடு சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வினை மேற்கொண்டனர். 300க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    2/2

    யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் 

    இதனையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணியானது நேற்று(ஏப்ரல்.,19) முழுவதும் நீடித்த நிலையில், சுமார் 14 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினையடுத்து கட்டிட உரிமையாளர்கள் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. கட்டிடத்தை பழுதுப்பார்க்கும் முன்னர் அனுமதிப்பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கான உரியப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் ஏன் பணியை மேற்கொண்டனர்? என்பது போன்ற விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சென்னை

    நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு! வணிக செய்தி
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  போக்குவரத்து காவல்துறை
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  மெரினா கடற்கரை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை காவல்துறை

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023