NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 

    எழுதியவர் Nivetha P
    Apr 20, 2023
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

    இந்நிலையில் இந்த கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது.

    உடனே அங்கிருந்த மக்கள் இது குறித்து பாரிமுனை, பூக்கடை பகுதி தீயணைப்பு நிலையத்திற்கும், அப்பகுதி காவல்துறைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்கள்.

    அந்த தகவலின் படி. சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மாநகராட்சி பணியாளர்கள், அரக்கோணம் மற்றும் சென்னை அடையாறு பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் அதிநவீன உபகரணங்களோடு சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வினை மேற்கொண்டனர்.

    300க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சென்னை

    யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் 

    இதனையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணியானது நேற்று(ஏப்ரல்.,19) முழுவதும் நீடித்த நிலையில், சுமார் 14 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டது.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்தினையடுத்து கட்டிட உரிமையாளர்கள் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.

    கட்டிடத்தை பழுதுப்பார்க்கும் முன்னர் அனுமதிப்பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதற்கான உரியப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் ஏன் பணியை மேற்கொண்டனர்? என்பது போன்ற விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    சென்னை

    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் பருவகால மாற்றங்கள்
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு பிரதமர் மோடி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா

    காவல்துறை

    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் உத்தரப்பிரதேசம்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் ஆந்திரா

    காவல்துறை

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் தமிழ்நாடு
    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது மகாபலிபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025