NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

    எழுதியவர் Nivetha P
    Feb 27, 2023
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் மிகப்பெரிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது.

    இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதனால் இந்த ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்நிலையில் இந்த ரயில் நிலையம் நாட்டிலேயே முதல் அமைதியான ரயில் நிலையம் என்ற புகழை தன் வசப்படுத்தியுள்ளது.

    அதன்படி இங்கு, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த குரல் மூலம் ரயில்வே அறிவிப்புகளை தெரிவிப்பதற்கு பதிலாக, கூடுதலான தகவல் மையங்களும், டிஜிட்டல் முறையிலான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    டிஜிட்டல் பலகைகள்

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஆடியோ விளம்பரங்களும் இருக்காது

    இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடந்த சனிக்கிழமை உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன் படி, அனைத்து டிஜிட்டல் பலகைகளும் செயல்படும் வகையில் இருப்பதையும், தகவல் மையங்களில் போதுமான பணியாளர்கள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்யுமாறு அவர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஆடியோ விளம்பரங்களும் இருக்காது என்று சென்னை ரயில்வே கோட்டத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது பரிசோதனை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது என்றும், புறநகர் ரயில்களில் குரல் மூலமே அறிவிப்புகள் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை அமெரிக்கா
    சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு ரயில்கள்
    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு இந்தியா
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு கருணாநிதி

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி

    இந்தியா

    இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பில் கேட்ஸ் புகழாரம் உலகம்
    UPI- இந்தியர்களைக் கெடுக்கிறது - இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் பதிவு! ட்விட்டர்
    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025