NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புத்தக கண்காட்சி விழா அறிவிப்பு; எப்போது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் புத்தக கண்காட்சி விழா அறிவிப்பு; எப்போது?
    சென்னை புத்தக கண்காட்சி வரும் டிசம்பர் 27ஆம் துவங்கும்

    சென்னையில் புத்தக கண்காட்சி விழா அறிவிப்பு; எப்போது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 09, 2024
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சி, வரும் டிசம்பர் 27ஆம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    17 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, நந்தனம் YMCA மைதானத்தில் வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியினை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைக்கின்றனர்.

    துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN | சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைக்கின்றனர்

    துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை… pic.twitter.com/Tibm8uKbvK

    — Sun News (@sunnewstamil) December 9, 2024

    விவரங்கள்

    விடுமுறை நாட்களிலும் நடைபெறும் புத்தக கண்காட்சி

    புத்தகக் காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும்.

    மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும்.

    பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்களாக இருந்தாலும், விண்ணப்பித்தவர்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு 17 நாளும் தினசரி மாலை சிந்தனை அரங்கம் நடைபெறும் எனவும், அதில் அறிவுசார் பெருமக்கள் உரையாற்றுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இறுதி நாளில் நீதியரசர் ஆர்.மஹாதேவன் இறுதியுரை ஆற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    புத்தக கண்காட்சி

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    சென்னை

    சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கங்குவா
    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    புத்தக கண்காட்சி

    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து!  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  தமிழக அரசு
    சென்னையில் 47வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்  சென்னை
    புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம் மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025