NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது 
    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது

    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    06:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளார்கள்.

    இந்த நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த ஹரிஸ் மற்றும் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பல முக்கிய தகவல்கள் வெளியானது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 11 பேரினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.

    ஆருத்ரா

    கைது செய்யப்பட்ட 2 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது 

    இந்நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்ட ராஜா செந்தாமரை மற்றும் சந்திரக்கண்ணன் என்னும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜா செந்தாமரை என்பவர் ஆருத்ரா நிறுவனத்தில் கூடுதல் இயக்குனராக செயல்பட்டு வந்துள்ளார்.

    மற்றொரு நபர் சந்திரக்கண்ணன் ஆருத்ரா நிறுவனத்தின் விளம்பர பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

    இப்போதைய நிலவரப்படி மொத்தமாக இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்திரக்கண்ணன் என்பவரது அண்ணா நகர் வீட்டில் 90 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்த 2 பேர் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.5 கோடி பணம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்  பள்ளி மாணவர்கள்
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது ஈரோடு

    சென்னை

    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி
    சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை இந்தியா
    சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025