NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை 
    ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் சிஐடி அதிகாரிகளை கொண்ட ஒரு குழு அவரை விசாரித்து வருகிறது.

    ஊழல் வழக்கு: இரண்டாவது நாளாக சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் இரண்டாவது நாளாக இன்று ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் சிஐடி அதிகாரிகளை கொண்ட ஒரு குழு அவரை விசாரித்து வருகிறது.

    சந்திரபாபு நாயுடுவை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ஊழல் தடுப்புப் பணியக(ஏசிபி) நீதிமன்றம் சிஐடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

    செப்டம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அவரிடம் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    டியூகிவ்ப்

    சந்திரபாபு நாயுடுவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது

    நீதிமன்றம் விதித்தபடி சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி எம்ஆர் ரவி கிரண் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இரண்டு நாள் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்றக் காவலின் நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

    இன்று மாலை 5 மணிக்குள் 'ப்ளூ ஜீன்ஸ்' செயலி மூலம் நாயுடுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அவர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

    திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

    இன்றுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆந்திரா

    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் திருப்பதி
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் காவல்துறை
    ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு முதல் அமைச்சர்
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா

    இந்தியா

    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை
    1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்  கனடா
    வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா! டென்னிஸ்
    கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025