NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் சம்பாய் சோரன் கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் சம்பாய் சோரன் கோரிக்கை 

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் சம்பாய் சோரன் கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 01, 2024
    06:52 pm

    செய்தி முன்னோட்டம்

    புதிய ஆட்சியை அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தான் வலியுறுத்தியதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சம்பாய் சோரன் இன்று தெரிவித்துள்ளார்.

    பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று மாலை அமலாக்க இயக்குனரகத்தால் வியத்தகு முறையில் கைது செய்யப்பட்டார்.

    அப்போதிலிருந்து முதலமைச்சர் இல்லாததால், மாநிலத்தில் "குழப்பமான சூழ்நிலை" நிலவுவதாகவும் சம்பை சோரன் குறிப்பிட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜேஎம்எம்-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் நேற்று கைது செய்யப்பட்டார்.

    அதனால், ஆளும் கூட்டணியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களுடன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் வைத்து ஆளுநர் ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் இன்று சந்தித்தார்.

    ஜார்க்கண்ட்

    "விரைவில் முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்": சம்பாய் சோரன்

    தற்போது அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன், தனக்கு ஆட்சி அமைக்க அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரிடம் கேட்டு கொண்டுள்ளார்.

    "நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்... 43 எம்எல்ஏக்களும் சர்க்யூட் ஹவுஸில் (மாநில அரசு விருந்தினர் மாளிகை) தங்கியுள்ளனர்," என்று இன்று கூறிய சம்பாய் சோரன், "எங்கள் கோரிக்கை மீது விரைவில் முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்." என்று தெரிவித்துள்ளார்.

    "18 மணி நேரமாக மாநிலத்தில் அரசாங்கம் இல்லை. குழப்பமான சூழ்நிலை உள்ளது. அரசியலமைப்பு தலைவராக இருப்பதால், நீங்கள் விரைவில் ஒரு நல்ல அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்..." என்று அவர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது காவல்துறை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி இந்தியா
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இத்தாலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025