NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு
    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 25, 2025
    07:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

    அதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் பீதியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    சமீபத்திய பரவலில் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலானவை லேசானவை என்றும், வீட்டு தனிமைப்படுத்தலின் மூலமே சரிசெய்யப்பட்டுவிட முடியும் என்றும் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    தற்போது பரவும் மாறுபாடுகளின் தீவிரம் அல்லது பரவும் தன்மை அதிகரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

    இந்த பரவலில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பாதிப்புக்களிக் கொண்டுள்ள மாநிலங்களாக உள்ளன.

    இந்தியா

    ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் 

    ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மற்றும் ICMR இன் சென்டினல் நெட்வொர்க் தலைமையிலான இந்தியாவின் கண்காணிப்பு அமைப்பு சுவாச நோய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ள நிலையில், NB.1.8.1 மற்றும் LF.7 உள்ளிட்ட புழக்கத்தில் உள்ள மாறுபாடுகளின் தீவிரம் அதிகரிக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

    இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் திரிபு JN.1 ஆகவே உள்ளது. குறிப்பாக நெரிசலான பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

    கேரளா மருத்துவமனைகளில் கட்டாய முககவசம் அணிதலை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

    பரவலைக் கட்டுப்படுத்த N95 முககவசங்கள், சானிட்டைசர்கள் ஆகியவற்றை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    மத்திய அரசு
    சுகாதாரத் துறை
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா
    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 609 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 269 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா சீனா
    இந்தியாவில் மேலும் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா

    மத்திய அரசு

    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு பயங்கரவாதம்
    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பாகிஸ்தான்
    27 மருந்துகளை மளிகை கடைகளில் விற்க அனுமதிக்கும் சட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் இந்தியா
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது பஹல்காம்

    சுகாதாரத் துறை

    சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு நிமோனியா
    புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் புதுச்சேரி
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தொற்று
    அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர்

    இந்தியா

    நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா? மின்சார வாகனம்
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025