NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 13, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது.

    கனடாவில் காலிஸ்தானி குழுக்கள் வெளியிட்ட புதிய சுவரொட்டிகள் மூலம், பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    காலிஸ்தானி ஆதரவாளர், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்கு வெளியே, இந்தியாவில் இருந்து தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து "வாக்கெடுப்பு" நடத்தப்படும் என்று அறிவித்து, அந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

    காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், பாலஸ்தீனத்தின் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் போல, காலிஸ்தானும் நடத்தும், என கூறிய நேரத்தில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    card 2

    பகிரங்கமாக மிரட்டல் விடும் காலிஸ்தானியர்கள்

    இந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டி, கடந்த செவ்வாயன்று, காலிஸ்தானி குழுவான சீக்கியர்களுக்கான நீதிக்கான குழுவினரால் (SFJ) ஒட்டப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    அந்த சுவரொட்டிகளின்படி, அக்டோபர் 21 அன்று சர்ரேயில் இருந்து இந்திய துணைத் தூதரகம் வரை போராட்டம் நடைபெறும் என்றும், அதனை தொடர்ந்து, அக்டோபர் 29 அன்று வான்கூவரில் "வாக்கெடுப்பு" நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிஜாரின் மரணத்திற்கு நீதி கோரும் வகையில் இந்த போராட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    இந்த சுவரொட்டிகளில், இந்தியா பிரதமர், மத்திய அமைச்சர் தாண்டி மேலும் இருவர் படங்களும் ஒட்டப்பட்டு இருந்தது. அவர்கள், கனடாவிற்கான இந்திய தூதர், சஞ்சய் குமார் வர்மா மற்றும் தூதரக ஜெனரல்கள் மணீஷ் மற்றும் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெளியுறவுத்துறை
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பிரதமர் மோடி
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வெளியுறவுத்துறை

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா
    சீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர் இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து இந்தியா
    பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில் இந்தியா
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா
    'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்  இந்தியா

    பிரதமர் மோடி

    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்  வந்தே பாரத்
    இன்று பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: அவர் கடந்து வந்த பாதை  இந்தியா
    தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி

    மத்திய அரசு

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா
    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025