NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகளை வழங்க மையங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகளை வழங்க மையங்கள்
    ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகள்

    ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகளை வழங்க மையங்கள்

    எழுதியவர் Nivetha P
    Apr 04, 2023
    08:39 pm

    செய்தி முன்னோட்டம்

    'பணமில்லா ஹஜ்' என்பதை வலியுறுத்தி, வருடாந்திர யாத்திரை செல்பவர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எஸ்பிஐ வங்கி மூலம் அந்நிய செலவாணி அட்டையினை வழங்கும் நடவடிக்கையினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    இதன்படி 2023ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய இஸ்லாமியர்களுக்கு மிகுந்த வசதிகளையும், மலிவான விலையிலும் பயணம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அண்மையில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அதன்படி இந்திய இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதையும், யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்படுவதும் இந்தாண்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கப்பட்டவர்களுள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1.4 லட்சம் பேர் மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருப்போர் விவரம் உடனே வெளிப்டையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    22,000 கிளைகள்

    எஸ்பிஐ வங்கியுடன் கைகோர்த்த இந்திய அரசு

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில், இந்தாண்டு நிச்சயம் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆன்லைனில் 1.84 லட்சம் விண்ணப்பதாரர்களின் 70க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 10,621 பேரும், 'மெஹரம்(ஆண்துணை)' இல்லாமல் ஹஜ் செய்யும் 4,314 பெண்கள் உள்பட 14,935 பேருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆண் துணை இல்லாமல் பெண்கள் குழு அதிகளவில் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

    தொடர்ந்து நாடு முழுவதும் 22,000 கிளைகளை கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி கிளைகள் மூலம் அரேபியாவில் தங்கியிருக்கையில் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அந்நிய செலவாணி அட்டைகள் மற்றும் கட்டாய காப்பீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025