NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை

    நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 17, 2024
    01:31 pm

    செய்தி முன்னோட்டம்

    போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு நடத்த உள்ளது.

    மத்திய அமைச்சர்களான அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகிய 3 பேர் கொண்ட குழு மீண்டும் விவசாயத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விவசாயிகள் பயிர்களுக்கு உத்தரவாதமான விலை மற்றும் கடன் நிவாரணத்திற்கான கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால், பிப்ரவரி 8, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்த முந்தைய பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.

    இதற்கிடையில், போராட்டம் தொடரும், ஆனால் அமைதியாக தொடரும் என்று விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறியுள்ளார்.

    டெல்லி

    தொடரும் விவசாயிகளின் போராட்டம் 

    ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்யும் சட்டத்தைக் கோரி, "டெல்லி சலோ" போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    மேலும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள், விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

    விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்(2020-21-ல் இருந்து) மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி" வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

    விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்
    வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு  ஹரியானா
    இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு  காவல்துறை

    மத்திய அரசு

    2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு ! மு.க ஸ்டாலின்
    அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன? எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025