
2050 வரையிலும் சாத்தியமில்லை; ஏசி வெப்பநிலையை 20-28 டிகிரி செல்சியஸாக நிர்ணயிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான முன்மொழியப்பட்ட நிலையான ஏர் கண்டிஷனர் வெப்பநிலை வரம்பை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பேசிய பூபேந்தர் யாதவ், அத்தகைய நடவடிக்கை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் 2050 க்கு முன்பு சாத்தியமில்லை என்றும் கூறினார். செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பூபேந்திர யாதவ், இந்த மாற்றம் இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு இணங்க செயல்படுத்தபப்டும் என்று வலியுறுத்தினார். ஐநாவிற்கு தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவின் காலநிலை உறுதிப்பாடுகள், அதன் குடிமக்களுக்கு மலிவு விலையில் எரிசக்தியை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பரிந்துரை
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பரிந்துரை
இந்த மாத தொடக்கத்தில், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், விரைவில் ஏர் கண்டிஷனர்கள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இருப்பினும், பூபேந்தர் யாதவின் அறிக்கை, இந்தக் கொள்கை இன்னும் அமல்படுத்தப்படுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. எரிசக்தி திறன் பணியகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஏசிகள் தற்போது 20-21 டிகிரி செல்சியஸ் வரை அமைக்கப்பட்டுள்ளன. உகந்த ஆறுதல் மற்றும் ஆற்றல் திறனுக்காக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை அமைக்க நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஏசி வெப்பநிலையை வெறும் 1 டிகிரி அதிகரிப்பது மின்சார பயன்பாட்டை சுமார் 6 சதவீதம் குறைக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது.