NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்
    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்

    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பானது வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி மெய்தி-குகி இன மக்களிடையே துவங்கிய கலவரம் 4 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    எனினும் இதன் தீவிரம் சற்று குறைந்து காணப்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அம்மாநிலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது.

    இதனிடையே இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறிப்பிட்ட அந்த 2 இனத்தினர் இடையே பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    வன்முறை 

    பாதுகாப்புக்கருதி வரும் வெள்ளைக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    இதற்கிடையே, மணிப்பூர் மாநில இம்பால் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹோம்ஜித், இஜாம் என்னும் 2 மாணவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியதாக புகைப்படங்களோடு கூடிய செய்திகள் வெளியானது.

    இதனையடுத்து மீண்டும் மணிப்பூரில் கடந்த 3 நாட்களாக வன்முறை வெடித்து பதற்றம் நிலவுகிறது என்று கூறப்படுகிறது.

    இதனால் கொடுக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் கொலை விவகாரத்தினை எதிர்த்து நேற்று(செப்.,26)பள்ளி-கல்லூரி மாணவர்கள் முதல்வர் அலுவலகம் நோக்கிச்செல்ல முயன்ற நிலையில் அவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    எனவே, பாதுகாப்புக்கருதி வரும் வெள்ளைக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் சட்ட-ஒழுங்கு அதிகாரம் உச்சவரம்பிலிருக்கும் பட்சத்தில், 19 காவல் எல்லைகளை தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கலவரம்
    கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மியான்மர்
    'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது' அமெரிக்கா
    மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல் நாகாலாந்து
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  பிரதமர் மோடி

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025