NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2025
    07:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு நேபாளி உட்பட 26 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்க, மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கும்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    மோசமான தாக்குதல்

    புல்வாமாவிற்கு பிறகு நடக்கும் மோசமான தாக்குதல்

    முன்னதாக, தாக்குதலின் விவரங்கள் குறித்து அமித்ஷா மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விளக்கினர்.

    பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதல், 2019 புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பிறகு இப்பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உறுதியான ராஜதந்திர நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் அட்டாரி சோதனைச் சாவடியை மூடுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஹல்காம்
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு கிரிக்கெட் செய்திகள்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி

    மத்திய அரசு

    ஸ்டார்லிங்க் தொடக்கத்திற்கான வரைமுறைகளை நிர்ணயித்த மத்திய அரசு ஸ்டார்லிங்
    ₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை அமைக்கிறது மத்திய அரசு தமிழ்நாடு
    சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவிப்பு சந்திரயான்
    நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் முதல்முறை; எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே இந்திய ரயில்வே
    24% வளர்ச்சியுடன் 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் வணிக வாகன ஏற்றுமதியில் இசுசு மோட்டார்ஸ் முதலிடம் வாகனம்
    இந்தியாவில் 2.9 மில்லியன் விளம்பரதாரர் கணக்குகளை சஸ்பெண்ட் செய்தது கூகுள்; 247 மில்லியன் விளம்பரங்களும் நீக்கம் கூகுள்
    பிரிட்டனின் பழமையான இந்திய உணவகம் வீராசாமி மூடப்படும் அபாயம்; பின்னணி என்ன? பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025