NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு 
    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 13, 2023
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய சந்தையில் விற்பனையாகும் மருந்துகள் குறித்து மத்திய அரசு, மருந்து தர கட்டுப்பாட்டு துறை மூலம் தொடர்ந்து மருந்தின் தரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இருமல், வலி, சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் 14 வகையான மருந்தின் கலவைகள் நிவாரணம் அளிப்பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி மத்திய அரசு அதன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

    அதாவது, குளோரபினாரமின் மெலியட் காடேயின், அமாக்ஸலின் ப்ரோமேக்சின், நிம்சலைடு பாராசிட்டமால் போன்ற கலவை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    தடை 

    அவகாசம் வழங்க வாய்ப்பில்லை - மருத்துவத்துறை அதிகாரிகள் 

    இதனை தொடர்ந்து, இந்த மருந்துகளை உடனே தடை செய்தால் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும்.

    அதனால் இந்த மருந்துகளின் தடையினை அமல்படுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து வர்த்தக நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு துறைக்கு கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்கள்.

    இதனையடுத்து, "தனிப்பட்ட ஓர் மாநிலத்திற்கு மட்டும் இதுபோன்ற கால அவகாசத்தினை வழங்க முடியாது.

    மேலும் இந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் காரணத்தினாலேயே தடை செய்யப்பட்டுள்ளது.

    அப்படி இருக்கையில் இந்த மருந்துகளின் தடைக்கு கால அவகாசம் வழங்குவது என்பது சாத்தியமில்லாத விஷயம் ஆகும்" என்று மருந்து தர கட்டுப்பாடு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மத்திய அரசு

    நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்  இந்தியா
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் இந்தியா
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது  இந்தியா
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  வருமான வரித்துறை
    தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3!  தென் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025