தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பகிர்வாக மத்திய அரசு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயினை வழங்கியுள்ளது. இந்த தொகையானது 14வது தவணையாக தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. பகிர்வாக 5 ஆயிரத்து 769 கோடி ரூபாயினை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மாநிலங்களின் மூலதன வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்னும் மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த ஜிஎஸ்டி பகிர்வு தொகை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.