NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

    எழுதியவர் Nivetha P
    Feb 08, 2023
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி-நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஓர் கேள்வியினை எழுப்பினார்.

    அதன்படி, அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும், சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் மூலம் ஊக்குவிப்பதற்கு எதிராக ஏதேனும் அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இவரது இந்த கேள்விக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் எழுத்துபூர்வமாக தற்போது பதில் அளித்துள்ளார்.

    அதன் படி அவர் கூறியுள்ளதாவது, பந்தயம் மற்றும் சூதாட்டம் அரசமைப்பு சட்டத்தின் 34 மற்றும் 62ன் கீழ் வருகிறது. இது மாநிலங்களின் ஒழுங்குமுறைக்குள் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    எழுத்துபூர்வமான பதில்

    குறிப்பிட்ட விதிமீறல்கள் அமைச்சக கவனத்திற்கு வந்தால் உடனே நடவடிக்கை

    இதனை தொடர்ந்து, முந்தைய பொது சூதாட்ட சட்டமான 1867ன் படி, பெரும்பாலான மாநில அரசுகள் பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து தங்களது சொந்த சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும் அவர், தனியார் டிவி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியிடுவோர் மற்றும் ஓடிடி தளங்களில் ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்தாண்டு ஜூன் 13ம் தேதி ஆலோசனைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து, மேற்கூறிய ஆலோசனைகள் சமூக ஊடக தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிடப்பட்ட விதிமீறல்கள் அமைச்சக கவனத்திற்கு எப்பொழுது வந்தாலும் அதற்கான தகுந்த நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றும் அவர் தனது எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி

    சமீபத்திய

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025