நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. "தேர்வு செயல்முறையை நடத்துவதில் வெளிப்படைத்தன்மை" இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைத்க்கப்பட்டது என்று நேற்று, கல்வி அமைச்சகம் கூறியிருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிபிஐ குழுக்கள் பீகார் மற்றும் குஜராத்திற்குச் சென்று நீட்-யுஜி தேர்வைச் சுற்றியுள்ள "பெரிய சதியை" விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 5-ம் தேதி 4,750 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில், முறைகேடுகள் நடந்ததாகவும் வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நெட் தேர்வு மோசடி தொடர்பாக 11 பேர் கைது
இதுவரை இல்லாத அளவு இந்த வருடம் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அதே நேரத்தில் 1,563 மாணவர்களுக்கு கூடுதலாக கருணை மதிப்பெண்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருணை மதிப்பெண்கள் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து ரத்து செய்யப்பட்டன. ஜூன் 14-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடைத்தாள் மதிப்பீடு முன்கூட்டியே முடிந்ததால் 10 நாட்களுக்கு முன்னதாக நீட் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணைகள் கடந்த மாதம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்டின் தியோகரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.